இளையராஜா - சரிகம காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

இளையராஜா - சரிகம காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: காப்​புரிமை விவ​காரத்​தில் சரிகம நிறு​வனத்​தின் பாடல்​களைப் பயன்​படுத்த இளை​ய​ராஜாவுக்கு விதிக்​கப்பட்ட இடைக்​கால தடையை டெல்லி உயர் நீதி​மன்​றம் நீக்க மறுத்துவிட்டது.

இதுதொடர்​பாக சரிகம நிறு​வனம் தாக்​கல் செய்த மனு​வில், ‘‘அன்னக்​கிளி, 16 வயதினிலே, கவிக்​கு​யில், முள்​ளும் மலரும், ராஜபார்​வை, நெற்​றிக்​கண், கல்​யாண​ராமன் உள்​ளிட்ட 134 திரைப்பட பாடல்​களுக்​கான காப்​புரிமை தங்​களிடம் இருக்​கும்​போது அதை இளை​ய​ராஜா பயன்​படுத்​து​வது, காப்​புரிமையை மீறிய செயல்’’ எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த மனுவை விசா​ரித்த டெல்லி உயர் நீதி​மன்ற நீதிபதி துஷார் ராவ் கெடில்​லா, சரிகம நிறு​வனம் சார்​பில் வெளி​யிடப்​பட்ட திரைப்​படப் பாடல்​களை பயன்​படுத்த இசையமைப்​பாளர் இளைய​ராஜாவுக்கு கடந்த பிப்​ர​வரி 16-ம் தேதி இடைக்​கால தடை விதித்​தார்.

இதையடுத்து இடைக்​கால தடையை நீக்​கக் கோரி இசையமைப்பாளர் இளை​ய​ராஜா டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் முறை​யிட்​டார். இந்த மனுவை விசா​ரித்த டெல்லி உயர்​நீ​தி​மன்ற நீதிபதி துஷார் ராவ் கெடில்லா இடைக்​கால தடையை நீக்​க மறுத்​து​விட்​டார்​.

இளையராஜா - சரிகம காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
இங்கிலாந்துக்கு கடும் சவால் கொடுத்த காங்கோ: தொடரில் இருந்து வெளியேறியது | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in