

புதுடெல்லி: இத்தாலியை பூர்விகமாகக் கொண்ட சோனியா காந்தி கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். ஆனால் அவரது பெயர் டெல்லி சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் கடந்த 1980-ம் ஆண்டே இடம்பெற்றுள்ளது.
எனவே, போலி ஆவணங்களை சோனியா காந்தி அளித்திருக்கக் கூடும். அவர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் நேற்று விசாரித்தார்.
அப்போது சோனியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார். இதை ஏற்ற டெல்லி நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்தது.