டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு

டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் 5 மாணவர்கள் உயி​ரிழந்​தனர்.

தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் மாணவர் விடு​தி​யாக செயல்​பட்டு வந்​தது. டெல்லி பல்​கலைக்​கழகத்​தின் தெற்கு வளாகத்​துக்கு அரு​கில் இக்​கட்​டிடம் அமைந்​துள்​ள​தால் ஏராள​மான மாணவர்​கள் தங்​கிப் படித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த கட்​டிடம் நேற்று பிற்​பகல் 1:30 மணி​யள​வில் திடீரென இடிந்து விழுந்​தது.

இதுகுறித்து தகவல் அறிந்​ததும் சம்பவ இடத்​துக்கு 12 தீயணைப்பு வாக​னங்​கள், பொக்​லைன் இயந்​திரங்​கள் மற்​றும் பேரிடர் மீட்​புப் படை​யினர் விரைந்​தனர்.

அதி​காரப்​பூர்வ மீட்​புக் குழு​வினர் வரு​வதற்கு முன்​பாகவே, உள்​ளூர் மக்​கள் கைகளாலேயே இடி​பாடு​களை அகற்றி இடி​பாடு​களுக்​குள் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். இந்த விபத்​தில் 5 மாணவர்கள் உயி​ரிழந்​தனர். மேலும் சிலர் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். கட்டிடத்தின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கட்​டிட இடி​பாடு​களுக்​குள் பலர் சிக்​கி​யிருக்​கலாம் என்​ப​தால் மீட்​புப் பணி தொடர்ந்து நடை​பெறுகிறது. இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.

பிரதமர் மோடி இரங்​கல்: இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்​திர மோடி ஆழ்ந்த இரங்​கலை​யும் துயரத்​தை​யும் தெரி​வித்​துள்​ளார். இது குறித்து பிரதமர் அலு​வல​கத்​தின் அதி​காரப்​பூர்வ ‘எக்​ஸ்’ தளப் பதி​வில், “டெல்லி சத்ய நிகேதனில் கட்​டிடம் இடிந்து விழுந்த சம்​பவம் மிகுந்த மனவேதனையளிக்​கிறது. இதில் தங்​கள் அன்​பிற்​குரிய​வர்​களை இழந்த குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். காயம் அடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​திக்​கிறேன்” என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in