தெருநாய் கணக்கிடும் பணியை ஆசிரியர்களிடம் தரவில்லை: ஆம் ஆத்மி புகாருக்கு பாஜக அரசு பதில்

டெல்லி கல்வி அமைச்​சர் ஆஷிஷ் சூட்

டெல்லி கல்வி அமைச்​சர் ஆஷிஷ் சூட்

Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் தெரு நாய்​களை கணக்​கிடும் பணி அரசு பள்ளி ஆசிரியர்​களிடம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வால் கடும் கண்​டனம் தெரிவித்தார்.

இந்​நிலை​யில், டெல்லி சட்​டப்​பேர​வை​யின் குளிர்​கால கூட்​டத் தொடரின் 2-ம் நாளான நேற்​று, ஆம் ஆத்மி உறுப்​பினர்​கள் இந்​தப் பிரச்​சினையை எழுப்பி கோஷம் எழுப்​பினர். இதற்கு ஆளும் பாஜக உறுப்​பினர்​கள் மறுப்பு தெரி​வித்​தனர். இந்த விவகாரத்தால் ஆளும் கட்சி மற்​றும் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​களுக்கு இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதனால் அமளி ஏற்பட்​ட​தால் சபா​நாயகர் விஜேந்​தர் குப்தா அவையை 2 முறை ஒத்​தி​வைத்​தார்.

இதுதொடர்​பாக டெல்லி கல்வி அமைச்​சர் ஆஷிஷ் சூட் முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வாலுக்கு ஏற்​கெனவே ஒரு கடிதம் எழுதி இருந்​தார். அதில், “தெரு நாய்​களை கணக்கெடுக்​கும் பணி​யில் அரசு பள்ளி ஆசிரியர்​களை ஈடு​படுத்​து​வ​தாக தவறான தகவலை பரப்பி வரு​கிறீர்​கள். இது தொடர்​பாக அரசு வெளி​யிட்​டுள்ள சுற்றறிக்​கையை படித்​துப் பாருங்​கள். இந்த விவ​காரத்​தில் மன்னிப்பு கோர வேண்​டும்” என கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>டெல்லி கல்வி அமைச்​சர் ஆஷிஷ் சூட்</p></div>
ஐ.டி. பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்: ஜார்க்கண்ட் இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in