டெல்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் மூடுபனியால் 7 பேருந்துகள், 3 கார்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி

டெல்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் மூடுபனியால் 7 பேருந்துகள், 3 கார்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி
Updated on
1 min read

மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள டெல்லி - ஆக்ரா விரைவுச்சாலையில், அடர்ந்த மூடுபனி காரணமாக இன்று காலை 7 பேருந்துகளும், 3 கார்களும் மோதிக்கொண்டு தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.

மதுராவில் உள்ள டெல்லி - ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று காலையில் மூடுபனியால் ஏற்பட்ட குறைந்த காணும் திறன் காரணமாக பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த மோதலுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்தன.

இதுகுறித்து பேசிய மதுரா மூத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார், “இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுராவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் நடந்த ஒரு பெரிய சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடர்ந்த மூடுபனி காரணமாக மோதிக்கொண்டு தீப்பிடித்தன.

இந்தச் செய்தி எங்களுக்குக் கிடைத்தவுடன், தீயணைப்புத் துறை, உள்ளூர் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. தேடுதல் மற்றும் மீட்புப் பணி இப்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதுவரை, நான்கு பேர் உயிரிழந்ததை எங்களால் உறுதிப்படுத்த முடிகிறது.

சுமார் 25 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இருப்பினும், அவர்களில் யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை. அவர்கள் தற்போது தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். மேலும், இங்கு இருக்கும் மீதமுள்ளவர்களை அரசு வாகனங்கள் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறோம்.” என்றார்.

யமுனா விரைவுச்சாலையில் நடந்த சாலை விபத்து குறித்துப் பேசிய மதுரா மாவட்ட ஆட்சியர் சந்திர பிரகாஷ் சிங், “ இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும். இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை நாங்கள் மீட்டுள்ளோம். 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், 14-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. நிவாரணப் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. இதில் முழு அரசு இயந்திரமும் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்

முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) அதிகாலையில் டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் ஏற்பட்ட அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, சுமார் 20 வாகனங்கள் மோதிக்கொண்டு வாகன விபத்து ஏற்பட்டது. அதிகாலை 5:00 மணியளவில் நடந்த இந்த விபத்தில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

டெல்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் மூடுபனியால் 7 பேருந்துகள், 3 கார்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி
நெல்லை அருகே அசாம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவர்கள் உட்பட மூவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in