மே.வங்கத்தில் மம்தா அரசின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது: பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க தேர்தலையொட்டி கூச் பெஹாரில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவரை வரவேற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள். படம்: பிடிஐ

மேற்கு வங்க தேர்தலையொட்டி கூச் பெஹாரில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவரை வரவேற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள். படம்: பிடிஐ

Updated on
1 min read

கூச் பெஹார்: மேற்கு வங்​கத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி ஆட்​சி​யின் கவுன்ட்​ட​வுன் தொடங்கி விட்​டது என பிரதமர் மோடி உறு​திபடத் தெரி​வித்​தார்.

கூச் பெஹார் பகு​தி​யில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: மேற்கு வங்​கத்​தில் மால்டா மற்​றும் சந்​தேஷ்​காளி​யில் நடை​பெற்ற வன்​முறைச் சம்​பவங்​களுக்​குத் திரிண​மூல் காங்​கிரஸே பொறுப்​பு. மாநிலத்​தில் சட்ட ஒழுங்கு சீர்​குலைந்து காட்​டாட்சி நில​வு​கிறது. உச்ச நீதி​மன்​றமே இந்த விவ​காரத்​தில் தலை​யிட வேண்​டிய கட்​டா​யத்​திற்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளது. மக்​களின் சொத்​துகளைத் திரிண​மூல் கொள்​ளை​யடிக்கிறது. இதற்கு மே 4-ம் தேதி முடிவு​கட்​டப்​படும். மம்தா அரசின் கவுன்ட்​ட​வுன் தொடங்​கி​விட்​டது.

ஒரு​புறம், ஊடுரு​வல்​காரர்​ களால் தங்​கள் சொந்த மண்​ணிலேயே சுதந்​திரத்தை இழந்​து​விடு​வோமோ என்ற அச்​சம் மேற்கு வங்க மக்​களிடையே நில​வு​கிறது. மறு​புறம், பாஜக அவர்​களது மண்​ணில் தலைநிமிர்ந்து வாழும் நம்​பிக்​கையை அளிக்​கிறது. மம்தா ராஜ்ஜி​யத்​தில் சொத்​துக்​களைப் பறி​கொடுக்​கும் பயம் ஒரு​புறம் என்​றால், பாஜக ஆட்​சி​யில் சொந்​த​மாக வீடும், நில உரிமை​யும் கிடைக்​கும் என்ற உறுதி மறு​புறம் உள்​ளது. இதனை மேற்கு வங்க மக்​கள் நன்கு புரிந்து கொள்ள வேண்​டும்.

தேர்​தல் நாளில் திரிண​மூல் காங்​கிரஸ் குண்​டர்​களுக்கு மக்​கள் அஞ்ச வேண்​டாம். மே 4-ம் தேதி​யுடன் மம்தா ஆட்சி முடிவுக்கு வந்​ததும், சட்ட விரோதச் செயல்​களில் ஈடு​பட்ட குண்​டர்​கள் மற்​றும் அவர்​களது சிண்​டிகேட்​கள் மீது சட்​டம் தனது கடமை​யைச் செய்​யும்.

நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வைகளில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீடுவழங்க தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதற்​காக ஏப்​ரல் 16, 17 மற்​றும் 18 ஆகிய தேதி​களில் நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக் கூட்​டத்​தொடர் கூட்​டப்பட உள்​ளது. அதே​போல், மக்​கள்​தொகை​யைக் கட்​டுப்​படுத்த சிறப்​பாகச் செயல்​பட்ட மாநிலங்​களின் நாடாளு​மன்​றத் தொகுதி இடங்​கள் பாதிக்​கப்​ப​டாது என கூச் பெஹார் மண்​ணில் இருந்து நான் உறுதி அளிக்​கிறேன்.

மேற்கு வங்​கத்​தில் ஊடுரு​வல்​காரர்​களைக் காப்​பாற்​று​வதற்​காகவே தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​களை திரிண​மூல் காங்​கிரஸ் எதிர்த்து வரு​கிறது. 2026-ம் ஆண்டு தேர்​தல் சுதந்​திர​மாக​வும் நேர்​மை​யாக​வும் நடக்​கும் எனத் தேர்​தல் ஆணை​யத்​தின் மீது நான் நம்​பிக்கை கொண்​டுள்​ளேன். எனவே, இந்​தத் தேர்​தல் மேற்கு வங்​கத்​தின் எதிர்​காலத்தை தீர்​மானிக்​கும்​.இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

<div class="paragraphs"><p>மேற்கு வங்க தேர்தலையொட்டி கூச் பெஹாரில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவரை வரவேற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள். படம்: பிடிஐ </p></div>
மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்.9-ம் தேதி வெளியாகும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in