கேரளாவைக் கைப்பற்றியது காங்கிரஸ்

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பரவூர் தொகுதியில் போட்டியிட்ட கேரள எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.டி.சதீஷன் வெற்றி பெற்றார். அவரை கட்டியணைத்து வாழ்த்து சொல்கிறார் நிர்வாகி ஒருவர். படம்: பிடிஐ

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பரவூர் தொகுதியில் போட்டியிட்ட கேரள எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.டி.சதீஷன் வெற்றி பெற்றார். அவரை கட்டியணைத்து வாழ்த்து சொல்கிறார் நிர்வாகி ஒருவர். படம்: பிடிஐ

Updated on
3 min read

திருவனந்தபுரம்: கேரள சட்​டப்​பேர​வைக்கு நடை​பெற்ற தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்​க​வுள்​ளது.

கேரள சட்​டப்​பேர​வை​யில் 140 தொகு​தி​கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணிக்​கும்​(எல்​டிஎஃப்), காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்​கும்​(​யுடிஎஃப்) கடும் போட்டி இருந்​தது.

மொத்​த​முள்ள 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில், ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் காங்​கிரஸ் 95 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 27 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதர தொகு​தி​கள் கூட்​டணி கட்​சிகளுக்கு வழங்​கப்​பட்​டன.

இதே​போல் இடது ஜனநாயக முன்​னணி சார்​பில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி 86 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதர தொகு​தி​களில் கூட்​டணி கட்​சிகள் போட்​டி​யிட்​டன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 115 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதர தொகு​தி​கள் அதன் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்​டன.

கேரளா​வில் 140 தொகு​தி​களுக்​கும் கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்​ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்​ணிக்​கை​யின் முடி​வில் யுடிஎஃப் கூட்​டணி 97 இடங்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளது.

காங்​கிரஸ் 63, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 22, கேஇசி 7, ஆர்​எஸ்பி 3, ஆர்​ஜேடி 1, கேஇசி(ஜே) 1 இடங்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளது. அறு​திப் பெரும்​பான்​மைக்கு 71 தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டும் எனும் நிலை​யில், காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி 97 இடங்​களைக் கைப்​பற்​றி​யுள்​ள​தால் மீண்​டும் ஆட்​சியை கைப்​பற்ற இருக்​கிறது. கடைசி​யாக காங்​கிரஸ் தலை​மையி​லான யுடிஎஃப் கூட்​டணி ஆட்சி 2011 முதல் 2016 வரை ஆட்​சி​யில் இருந்​தது. அப்​போது உம்​மன் சாண்டி முதல்​வ​ராக இருந்​தார். 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு அக்​கட்சி மீண்​டும் ஆட்​சி​யில் அமர​வுள்​ளது.

சதீஷன், சென்​னிதலா வெற்றி: கேரள காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வ​ரான ரமேஷ் சென்​னிதலா ஹரி​பாட் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். அவர் இம்​முறை 68,184 வாக்​கு​கள் பெற்று மீண்​டும் அதே தொகு​தி​யில் வெற்றி பெற்​றார். கட்​சி​யின் மற்​றொரு மூத்த தலை​வ​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வ​ரு​மான வி.டி.சதீஷன் இம்​முறை பரவூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். வாக்கு எண்​ணிக்​கை​யின் முடி​வில், அவர் மொத்​தம் 78,658 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றுள்​ளார்.

மார்க்​சிஸ்ட்: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான எல்​டிஎஃப் 35 இடங்​களைக் கைப்​பற்றி 2-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது. முதல்​வர் பின​ராயி விஜயன் தர்​மடம் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். அவர் மொத்​தம் 85,614 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி 26 இடங்​களை​யும், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி 8 இடங்​களை​யும் கைப்​பற்​றி​யுள்​ளது.

3 இடங்​களில் பாஜக வெற்றி: இந்​தத் தேர்​தலில் பாஜக 3 இடங்​களில் வெற்றி பெற்​றது. திரு​வனந்​த​புரத்​தில் உள்ள நெமோன், கழக்​கூட்​டம், சத்​தன்​னூர் ஆகிய மூன்று தொகு​தி​களில் பாஜக வெற்றி பெற்​றுள்​ளது. நெமோன் தொகு​தி​யில், பாஜக​வின் மூத்த தலை​வ​ரும் முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான ராஜீவ் சந்​திரசேகர் வெற்றி பெற்​றார். இவர் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வ​ரும் அமைச்​சரு​மான வி. சிவன்​குட்​டியை 3,590 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தார்.

மற்​றொரு தொகு​தி​யான கழக்​கூட்​டத்​தில், பாஜக மூத்த தலை​வ​ரும், முன்​னாள் மத்​திய அமைச்​ச​ரான வி. முரளீதரனும் வெற்றி பெற்​றார். இது திரு​வனந்​த​புரம் பகு​தி​யில் பாஜக அடைந்த மற்​றொரு குறிப்​பிடத்​தக்க வெற்​றி​யாக அமைந்​தது.

50 ஆண்​டுக்​குப் பின்​... 50 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் நாட்​டில் கம்​யூனிஸ்ட் கட்​சி​களின் அரசே இல்​லாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. வழக்​க​மாக மேற்கு வங்​கம், திரிபு​ரா, கேரளா ஆகிய 3 மாநிலங்​களில் ஏதாவது ஒன்​றில் கம்​யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடை​பெறும்.

1977 முதல் மேற்கு வங்​கத்​தில் இடது​சா​ரி​களின் அரசு இருந்து வந்​தது. 2011-ல் மேற்கு வங்​கத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் வீழ்த்​திய திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வ​ரான மம்தா பானர்ஜி ஆட்சி பீடத்​தில் அமர்ந்​தார். அதன் பின்​னர் அங்கு கம்​யூனிஸ்ட் கட்​சிகளால் ஆட்​சி​யைப் பிடிக்க முடிய​வில்​லை. அதே​போல, திரிபு​ராவை ஆண்ட கம்​யூனிஸ்ட் கட்​சிகளும், 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக​விடம் தோல்வி கண்டு ஆட்​சியை இழந்​தது.

தற்​போதைய நிலை​யில் கேரளா​வில் மட்​டுமே கம்​யூனிஸ்ட் கட்​சி​களின் ஆட்சி நடை​பெற்று வந்​தது. அங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியை இழந்தது.

வி.டி.சதீஷன் அடுத்த முதல்வர்?- கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரவுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களாக வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால், சசி தரூர் ஆகியோர் உள்ளனர். இதில் வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகியுள்ளனர்.

முதல்வர் பதவிக்கு போட்டியாக 4 பேர் இருந்தபோதிலும் வி.டி.சதீஷன் இந்தப் போட்டியில் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மேலிடத்தில் வி.டி.சதீஷனுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் அவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in