விவசாயம் உட்பட 11 துறைக்குத் திட்டம்: அசாமில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ராகுல்

பொகாஜன் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். படம்: பிடிஐ

பொகாஜன் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். படம்: பிடிஐ

Updated on
1 min read

பொகாஜன்: அ​சாம் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான காங்​கிரஸ் கட்​சி​யின் தேர்​தல் அறிக்​கையை ராகுல் காந்தி நேற்று வெளி​யிட்​டார்.

அசாமில் 126 உறுப்​பினர்​களைக் கொண்ட சட்​டப்​பேர​வைக்கு வரும் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், பொகாஜன் நகரில் காங்​கிரஸ் கட்சி சார்​பில் தேர்​தல் பிரச்​சார பொதுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில், அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, மாநில காங்​கிரஸ் தலை​வர் கவுரவ் கோகோய் மற்​றும் பிற மூத்த தலை​வர்​களு​டன் இணைந்து கட்​சி​யின் தேர்​தல் அறிக்​கையை வெளி​யிட்​டார்.

நிர்​வாகம், மாநிலத்​தின் தனித்​து​வ​மான அடை​யாளம், சுகா​தா​ரம், உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, தொழில்​மய​மாக்​கல், விவ​சா​யம், கிராமப்​புற மற்​றும் நகர்ப்​புற மேம்​பாடு, காலநிலை மாற்​றம் மற்​றும் பாது​காப்​பான அசாம் ஆகிய 11 துறை​களின் வளர்ச்சிக்கு தீர்​மானங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

கடந்த மார்ச் 29-ம் தேதி அசாம் சென்​றிருந்த காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே, ஐந்து வாக்​குறு​தி​களை வெளி​யிட்​டிருந்​தார். இதில் பெண்​களுக்கு மாதாந்​திர பணப் பரி​மாற்​றம், தொழில் தொடங்க பெண்​களுக்கு கூடு​தலாக ரூ.50,000 நிதி​யுத​வி, ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.25 லட்​சம் பணமில்லா மருத்​து​வக் காப்​பீடு உள்​ளிட்ட அம்​சங்​கள் இடம்​பெற்​றிருந்​தன.

பொகாஜன் தொகுதி காங்​கிரஸ் வேட்​பாளர் ரட்​டன் எங்​திக்கு ஆதர​வாக நடை​பெற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் மிக​வும் ஊழல் நிறைந்த முதல்​வராக ஹிமந்த பிஸ்வா சர்மா உள்​ளார். ஊழலில் அவரும் அவரது குடும்​ப​மும் முதலிடத்​தில் உள்​ளது. தேர்​தலுக்கு பிறகு அமை​யும் காங்​கிரஸ் அரசு இதற்​காக அவர் மீது நடவடிக்கை எடுக்​கும்.

அசாமில் மூன்று பெரிய நிறு​வனங்​களுக்கு மொத்​தம் 98,400 பிகா நிலம் வழங்​கப்​பட்​டுள்​ளது. பிரதமர் மோடி, அமைச்​சர் அமித் ஷா, ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகிய மூவரும் அசாமில் ஒரு நில ஏடிஎம்-ஐ உரு​வாக்​கி​யுள்​ளனர். அவர்​கள் மக்​களிட​மிருந்து நிலத்​தைப் பறித்து பெரிய தொழில் அதிபர்​களுக்கு வழங்​கு​கின்​றனர். அதி​காரம் உள்​ளூர் மக்​களுக்கே வழங்​கப்பட வேண்​டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை. இவ்​வாறு ராகுல்​ ​காந்​தி பேசி​னார்​.

<div class="paragraphs"><p>பொகாஜன் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். படம்: பிடிஐ</p></div>
தலைமை தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in