புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகை வந்த புதினை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து, புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய ராணுவ அணிவகுப்பை புதின் பார்வையிட்டார். இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை திரவுபதி முர்மு, புதினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக புதினுடன் வருகை தந்துள்ள அந்நாட்டின் தூதுக்குழுவினரை புதின், திரவுபதி முர்முவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கைகளை குலுக்கி, திரவுபதி முர்மு வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியை அடுத்து, மகாத்மா காந்தி நினை​விடத்​தில் அதிபர் புதின் அஞ்​சலி செலுத்​துகிறார். இதன்​ பிறகு டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் அதி​காரப்​பூர்​வ​மாக பேச்சுவார்த்தை நடத்த உள்​ளனர். அப்​போது பாது​காப்​பு, அணு சக்தி, தொழில்​நுட்​பம், வர்த்​தகம், விண்​வெளி உள்ளிட்ட துறை​கள் தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 25 ஒப்பந்​தங்​கள் கையெழுத்தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த 2000-ம் ஆண்​டில் முதலா​வது இந்​திய, ரஷ்ய வரு​டாந்திர உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெற்​றது. இந்த வரிசை​யில் 22-வது உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஜூலை​யில் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in