விரைவில் விமான சேவையை தொடங்கும் 2 நிறுவனங்கள்

விரைவில் விமான சேவையை தொடங்கும் 2 நிறுவனங்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் வேக​மாக வளர்ந்து வரும் விமானப் போக்​கு​வரத்து சந்​தை​யில் போட்​டியை அதி​கரிக்​கும் புதிய முயற்​சி​யாக, அல் ஹிந்த் ஏர், ஃப்ளை எக்​ஸ்​பிரஸ் ஆகிய 2 புதிய விமான நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

தற்​போது நாட்​டின் மிகப் பெரிய விமான நிறு​வன​மாக இண்​டிகோ உள்​ளது. இந்த நிறு​வனம் விமானிகள் பற்றாக்குறையால் சமீபத்தில் ஆயிரக்​கணக்​கான விமான சேவை​களை ரத்து செய்​தது. இதனால் பயணி​கள் பாதிக்கப்பட்டனர்.

இந்​தி​யா​வின் உள்​நாட்டு விமானப் போக்​கு​வரத்து சந்​தை​யில் இண்​டிகோ நிறு​வனத்​தின் பங்கு சுமார் 65 சதவீத​மாக உள்​ளது. இதையடுத்து ஏர் இந்​தியா குழு​மம் சுமார் 27 சதவீத பங்கு வகிக்​கும் நிலை​யில் சிறிய நிறு​வனங்​களுக்கு குறைந்த இடமே அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் போட்​டியை அதி​கரிக்க மேலும் பல நிறு​வனங்​களுக்​கான தேவை எழுந்​துள்​ளது.

இந்​நிலை​யில் அல் ஹிந்த் ஏர், ஃப்ளை எக்​ஸ்​பிரஸ் ஆகிய 2 புதிய விமான நிறு​வனங்​களுக்​கு சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சகம் இந்த வாரம் தடை​யின்மை சான்​றிதழ்​ (என்​ஓசி) வழங்​கி​யுள்​ள​தாக இந்த துறை​யின் அமைச்​சர் ராம் மோகன் நாயுடு ‘எக்​ஸ்’ சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டுள்​ளார்.

கேரளா​வின் அல் ஹிந்த் குழு​மத்தை சேர்ந்த அல் ஹிந்த் ஏர், முதன்​மை​யாக தென்​னிந்​தி​யா​வில் தனது சேவை​களை தொடங்க திட்​ட​மிட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in