“மேற்கு ஆசிய போர் பாதிப்பு... சவால்களை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை” - பிரதமர் மோடி உறுதி

“மேற்கு ஆசிய போர் பாதிப்பு... சவால்களை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை” - பிரதமர் மோடி உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: ”மேற்கு ஆசிய போரின் பாதிப்​பு​கள் நீண்​ட​காலம் நீடிக்கும். இதனால் ஏற்​பட்​டுள்ள சவால்​களை சமாளிக்க மத்​திய அரசு உரிய முயற்​சிகளை எடுத்து வரு​கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மேற்கு ஆசிய போர் தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி மக்களவை​யில் நேற்று முன்​தினம் விளக்​கம் அளித்​தார். இதே விவகாரம் தொடர்​பாக மாநிலங்​களவை​யில் நேற்று அவர் விளக்கம் அளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: மேற்கு ஆசிய போரால் (அமெரிக்கா- ஈரான்) உலகம் முழு​வதும் கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்​களுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உள்​ளது.

மேலும் வளை​குடா நாடு​களில் வாழும் ஒரு கோடி இந்​தி​யர்​களின் வாழ்​வா​தா​ரம், பாது​காப்பு குறித்து மிகுந்த கவலை கொள்கிறோம். ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஏராள​மான கப்​பல்​கள் ஆங்​காங்கே நிறுத்​தப்​பட்டு உள்​ளன. அவற்றில் ஏராள​மான இந்தியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். அவர்​களின் பாது​காப்பு குறித்தும் மத்​திய அரசு மிகுந்த அக்​கறை கொண்​டிருக்​கிது. மேற்கு ஆசிய போர் நீண்ட நாட்​கள் நீடித்​தால் மிக மோச​மான விளைவு​கள் ஏற்​படும். எனவே, போரை முடிவுக்கு கொண்டு வர சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்​டும்.

போர் காரண​மாக வளை​குடா பகு​தி​யில் கச்சா எண்​ணெய் போக்கு​வரத்து முடங்​கி​யிருக்​கிறது. எனவே உலகின் பல்​வேறு நாடு​களில் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​கிறோம். கடந்த சில நாட்​களாக எண்​ணெய், சமையல் காஸ் கப்​பல்​கள் இந்தி​யா​வுக்கு அடுத்​தடுத்து வந்து கொண்​டிருக்​கின்​றன.

ரூ.70,000 கோடி​யில் சரக்கு கப்​பல்:​ இந்​தி​யா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் கச்சா எண்​ணெ​யில் சுமார் 90% வெளி​நாட்டு கப்பல்​களில் கொண்டு வரப்​படு​கிறது. இதை கருத்​தில் கொண்டு ரூ.70,000 கோடி​யில் இந்​தி​யா​வில் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​கள் கட்​டும் திட்​டம் தொடங்​கப்​பட்டு இருக்​கிறது.

மேற்கு ஆசிய போரால் சர்​வ​தேச பொருளா​தா​ரம் மிகக் கடுமையாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த பாதிப்​பு​களில் இருந்து மீள மிக நீண்ட காலம் ஆகும். கரோனா பெருந்​தொற்று காலத்​தில் எழுந்த சவால்​களை எதிர்​கொள்ள சிறப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டன. இதே​போல மேற்கு ஆசிய போரால் எழுந்​துள்ள சவால்​களை சமாளிக்க 7 சிறப்பு குழுக்​கள் அமைக்​கப்​பட்டு உள்ளன.

பெட்​ரோல், டீசல் போது​மான அளவு கையிருப்​பில் உள்​ளது. விவசா​யிகளுக்கு தடை​யின்றி உரங்​கள் விநி​யோகம் செய்யப்படும். புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் சந்​திக்​கும் பிரச்சினை​களுக்கு விரைந்து தீர்வு காணப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

“மேற்கு ஆசிய போர் பாதிப்பு... சவால்களை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை” - பிரதமர் மோடி உறுதி
மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in