30 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000

30 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளு​மன்​றத்​தில் எழுப்​பப்​பட்ட கேள்வி ஒன்​றுக்கு மத்​திய சட்​டத் துறை அமைச்​சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நீதி​மன்ற உள்​கட்​டமைப்பு, மேம்​பாட்​டிற்​காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் செல​விடப்​பட்​டுள்​ளது. ஆனாலும், உச்ச நீதி​மன்​றத்​தில் 10,000-க்​கும் அதி​க​மான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன. இதில் 558 வழக்குகள் 20 ஆண்​டு​களை​யும், 26 வழக்​கு​கள் 30 ஆண்டுகளையும் கடந்துவிட்டன.

அதேவேளை​யில், நாட்​டின் 25 உயர் நீதி​மன்​றங்​களில் 80,000-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாகத் தேங்​கிக் கிடக்​கின்​றன. போதிய நீதிப​தி​கள் மற்​றும் பணி​யாளர்​கள் இல்​லாதது, உள்​கட்​டமைப்பு வசதி​கள் மற்​றும் வழக்​கு​களின் சிக்கலான தன்​மையே விசா​ரணை வேகத்​தைத் தீர்மானிக்கின்றன.

தற்​போது உயர் நீதி​மன்​றங்​களில் அனு​ம​திக்​கப்​பட்ட 1,122 நீதிபதி பணி​யிடங்​களில் 341 இடங்​கள் காலி​யாக உள்​ளன. அதே​போல, கீழமை நீதி​மன்​றங்​களில் உள்ள 30,868 அனு​ம​திக்​கப்​பட்ட பணி​யிடங்​களில் 7,311 இடங்​கள் காலி​யாக உள்​ளன. நீதிப​தி​களை நியமிப்​ப​தில் உயர் நீதி​மன்ற கொலீஜி​யங்​கள் காட்​டும் தாமதமே இதற்குக் காரண​மாக அமை​கிறது. 5 ஆண்​டு​களுக்​கும் மேலாக நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து முடித்து வைப்​ப​தற்காக, 25 உயர் நீதி​மன்​றங்களி​லும் மற்​றும் மாவட்ட நீதிமன்றங்களி​லும் ‘நிலுவை வழக்​கு​கள் தீர்​வுக்​குழுக்​கள்’ அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், வழக்​கு​களின் தேக்​கத்​தைக் குறைக்​கும் நோக்​கில் அரசு பல்​வேறு முக்​கியச் சட்​டத் திருத்​தங்​களைக் கொண்டு வந்​துள்​ளது. அதன்​படி, 2023-ம் ஆண்​டின் புதிய குற்​ற​வியல் சட்​டங்​கள், காசோலை உள்​ளிட்ட மாற்​று​முறை ஆவணங்​கள் திருத்​தச் சட்​டம் (2018), வணிக நீதி​மன்​றங்​கள் திருத்​தச் சட்​டம் (2018) மற்​றும் குறிப்பிட்ட பரி​காரத் திருத்​தச் சட்​டம் (2018) ஆகியவை இயற்றப்பட்டு நடை​முறைப்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு மத்​திய அமைச்​சர்​ தெரி​வித்​துள்​ளார்​.

30 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000
தமிழகமெங்கும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பெண்கள் வழிபாடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in