ஜார்க்கண்டில் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற 600 பேர் மீது வழக்குப் பதிவு

ஜார்க்கண்டில் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற 600 பேர் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்​கண்​டில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்திய தேர்​வில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது. இதைக் கண்​டித்து ராஞ்சியில் மாணவர்​கள் நடத்தி வரும் போராட்​டம் நேற்று 20-வது நாளை எட்​டியது.

இந்​நிலை​யில், கடந்த திங்​கட்​கிழமை ராஞ்​சி​யில் உள்ள சட்​டப்​பேர​வையை நோக்கி போராட்​டக்​காரர்​கள் பேரணி​யாகச் சென்​ற​போது பதற்​றம் அதி​கரித்​தது. அப்​போது போராட்​டக்​காரர்​களைக் கலைக்க பாது​காப்​புப் படை​யினர் தண்​ணீரை பீய்ச்சி அடித்​து, தடியடி நடத்​தி​யதுடன் கண்​ணீர் புகைக் குண்​டு​களைப் பயன்படுத்​தினர்.

இதனிடையே, ஒரு வாரத்​துக்​குள் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட​வில்லை என்​றால் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தப் போவ​தாக முன்​னாள் முதல்வர் ரகு​வர் தாஸ் நேற்று முன்​தினம் எச்​சரித்​தார்.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வையை நோக்கி நடை​பெற்ற பேரணி​யில் பங்​கேற்​ற​தாக 600 பேர் மீது காவல் துறை​யினர் நேற்று வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் 100 பேரின் பெயர்​கள் குறிப்​பிடப்​பட்​டுள்​ளதோடு, அடை​யாளம் தெரி​யாத 500 மாணவர்கள் மற்​றும் பிற போராட்​டக்​காரர்​கள் மீதும் வழக்​கு ​பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

ஜார்க்கண்டில் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற 600 பேர் மீது வழக்குப் பதிவு
மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது: 614 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in