பிரதமர் பெயரை தவறாக பயன்படுத்தியவர் மீது வழக்கு

பிரதமர் பெயரை தவறாக பயன்படுத்தியவர் மீது வழக்கு
Updated on
1 min read

புதுடெல்லி: தெற்கு டெல்லி வசந்த் கஞ்ச் பகு​தி​யில் வசிப்​பவர் நிஷீத் கோலி. இவர் மத்​திய அரசின் மூத்த செயலர்​கள், விஞ்​ஞானிகள், பாது​காப்​புத் துறை நிறு​வனங்​கள், ஆராய்ச்சி நிறு​வனங்​கள், அமெரிக்க கப்​பற்​படை போன்​றவற்​றுக்கு ஏராள​மான இ-மெயில்​களை அனுப்​பி​யுள்​ளார்.

அதில், ‘‘பிரதமர் அலு​வல​கம், முதன்மை செயலர் பி.கே.மிஸ்​ரா​வுடன் எனக்கு நெருங்​கிய தொடர்பு உள்​ளது. இந்​திய ராணுவத்​துக்கு தேவை​யான ஜெட் இன்​ஜின்​களை தயாரிக்க உதவி செய்ய விரும்​பு​கிறேன்’’ என்று தெரி​வித்​துள்​ளார். தான் ஒரு ஜவுளித் துறை ரசாயன பொறி​யாளர் என்று அறி​முகப்​படுத்​திக் கொண்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக இஸ்​ரோ, எச்​ஏஎல் போன்ற நிறு​வனங்​களை​யும் நிஷீத் கோலி தொடர்பு கொண்​டுள்​ளார். இது​போல் பிரதமர் மோடி, முதன்மை செயலரின் பெயர்​களை தவறாகப் பயன்​படுத்​தி​யது தொடர்​பாக பிரதமர் அலு​வல​கம் அளித்த புகாரின்​படி சிபிஐ அதி​காரி​கள் அவர் மீது வழக்​குப் பதிவு செய்து தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

பிரதமர் பெயரை தவறாக பயன்படுத்தியவர் மீது வழக்கு
‘மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்’ - எலான் மஸ்க் @ 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in