

கொல்கத்தா: கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு சமூக, மத மற்றும் தொண்டு அமைப்பாக பாரத் சேவாஷ்ரம் சங்கம் (பிஎஸ்எஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த சுவாமி ஜோதிர்மயானந்தாவை (உத்பல் மகராஜ்) வடக்கு தினாஜ்பூர் மாவட்டம், காலியாகஞ்ச் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிஎஸ்எஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் துறவு மற்றும் ஒழுக்க நெறியிலிருந்து அந்தத் துறவி விலகிச் சென்றுவிட்டார். அரசியலில் பங்கேற்பது, சங்கத்தின் உயரிய லட்சியத்துக்கு முரணானது. எனவே அவர் அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்” என்று கூறியுள்ளது.