சட்​டக் கல்​லூரி மாணவர்​களின் நடத்​தையைக் கட்டுப்படுத்த இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றம் திட்ட​வட்​டம்

சட்​டக் கல்​லூரி மாணவர்​களின் நடத்​தையைக் கட்டுப்படுத்த இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றம் திட்ட​வட்​டம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஹைத​ரா​பாத் தேசிய சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா​விற்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சிறப்பு விருந்​தின​ராக அழைக்​கப்​பட்​டிருந்​தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜந்​தர் மந்​தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்​டத்​தில் காவல்​ துறை நடத்திய தாக்​குதலுக்கு எதி​ரான மனுவை தலைமை நீதிபதி சூரிய காந்த் அமர்வு அவசர​மாக விசா​ரிக்க மறுத்​த​தாகக் கூறி, 2026-ம் ஆண்டு தேர்ச்சி பெறும் 70-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தலைமை நீதிப​திக்கு எதிர்ப்பு தெரி​வித்து பல்​கலைக்​கழக நிர்வாகத்​திற்கு கடிதம் எழு​தினர்.

இதற்​குப் பதிலடி​யாக, ஹைத​ரா​பாத் தேசிய சட்​டப்பல்​கலைக் கழகத்​தின் 2026-ம் ஆண்டு பிரிவு மாணவர்​களை வழக்​கறிஞர்​களாகப் பதிவு செய்​யத் தடை விதிக்​கப்​படு​வ​தாக இந்​திய பார் கவுன்​சில் அறி​வித்​தது. இதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "1961-ம் ஆண்​டின் வழக்​கறிஞர்​கள் சட்​டத்​தின் கீழ் பார் கவுன்​சிலுக்​கு, சட்​டக் கல்வி பயிலும் மாணவர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கும் அதிகாரம் நேரடி​யாகவோ அல்​லது மறை​முக​மாகவோ வழங்​கப்​பட​வில்​லை. ஒரு மாணவர் சட்​டப்​படிப்பை முடித்​து, அதி​காரப்​பூர்​வ​மாக வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்த பின்​னரே, பார் கவுன்​சிலின் கட்​டுப்​பாட்​டின் கீழ் வரு​கிறார்.

மாணவர்​கள் தரப்​பில் தவறு இருந்​தா​லும் அவர்​களுக்​குப் போராட உரிமை உண்​டு. எனவே, இந்த விவ​காரத்​தில் தலை​யிட இந்​திய பார் கவுன்​சிலுக்கு எந்த உரிமை​யும் இல்​லை" என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்​திய பார் கவுன்​சில் தனது சுற்​றறிக்​கையை ஏற்​க​னவே திரும்​பப் பெற்று விட்​ட​தால்​, இந்​த விவகாரத்தை முடித்​து வைப்​ப​தாக உத்​தர​விட்​டனர்​.

சட்​டக் கல்​லூரி மாணவர்​களின் நடத்​தையைக் கட்டுப்படுத்த இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றம் திட்ட​வட்​டம்
காலியாக உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in