‘விஜய் வெற்றியை கணித்தபோது ஏளனம் செய்தனர்’ - ஆக்ஸிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா ஆதங்கம்

‘ஆக்​ஸிஸ் மை இந்​தி​யா’ அமைப்​பின் தலை​வர் பிரதீப் குப்தா

‘ஆக்​ஸிஸ் மை இந்​தி​யா’ அமைப்​பின் தலை​வர் பிரதீப் குப்தா

Updated on
1 min read

புதுடெல்லி: தமிழக அரசி​யல் களத்​தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்​தி​யில் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான நிலை​யில், பிரபல தேர்தல் கணிப்பு நிறு​வன​மான ‘ஆக்​ஸிஸ் மை இந்​தி​யா’ அமைப்பின் தலை​வர் பிரதீப் குப்தா என்​டிடிவி ஊடகத்திற்​குப் பேட்டியளித்​தார். அப்​போது, தங்​களது நிறுவனத்தின் கணிப்​பு​கள் குறித்து அவர் கூறிய​தாவது:

தமிழகத் தேர்​தலில் நடிகர் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் கணிச​மான தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​றும், அவர் வெற்​றியை நோக்கி நகரு​வார் என்​றும் நாங்​கள் கணிப்​பு​களை வெளியிட்டோம். ஆனால், ஆரம்​பத்​தில் எங்​களு​டைய இந்​தத் துணிச்​சலான கணிப்பைக் கண்டு அரசி​யல் விமர்​சகர்​களும், மற்றவர்​களும் எங்களை நோக்​கிச் சிரித்​தார்​கள். எங்​களை ஒரு பொருட்​டாகவே மதிக்​காமல் கேலி செய்​தார்​கள், ஆனால், எதிர்ப்பு​களை​யும் விமர்​சனங்​களை​யும் கண்டு நாங்​கள் பின்​வாங்​க​வில்​லை.

தரவு​களின் அடிப்​படை​யில் மக்​கள் மனநிலையை நாங்​கள் துல்லிய​மாக ஆய்வு செய்​தோம். இன்று தேர்​தல் முடிவு​கள் வெளியான நிலை​யில், மக்​கள் எங்​கள் கணிப்​புக்கு ஆதரவாகத்தான் வாக்​களித்​துள்​ளனர் என்​பது உறுதியாகியுள்ளது.

எங்​களை எள்ளி நகை​யாடிய​வர்​கள் இப்போது மவுன​மாகி விட்​டனர். தமிழகத்​தில் ஒரு புதிய அரசி​யல் சக்​தி​யின் வரு​கை​யைத் எங்​களது நிறு​வனம் முன்​கூட்​டியே உணர்ந்​திருந்​தது. அது இப்​போது உண்​மை​யாகி​யுள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

<div class="paragraphs"><p><em>‘ஆக்​ஸிஸ் மை இந்​தி​யா’ அமைப்​பின் தலை​வர் பிரதீப் குப்தா</em></p></div>
முதல்வர் ஆகிறார் விஜய்... தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in