நடிகை ட்விஷா மரணத்தில் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? - கணவர், மாமியாரிடம் சிபிஐ விசாரணை

நடிகை ட்விஷா மரணத்தில் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? - கணவர், மாமியாரிடம் சிபிஐ விசாரணை
Updated on
1 min read

போபால்: உத்தர பிரதேசம் நொய்​டாவைச் சேர்ந்த நடிகை ட்விஷா சர்​மா தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்​றப்​பட்​டது. கடந்த சில நாட்​களாக ட்விஷா​வின் கணவர் சமர்த் சிங், மாமி​யார் கிரி​பாலா சிங்​கிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

இதன்​தொடர்ச்​சி​யாக இரு​வரை​யும் நேற்று போபாலில் உள்ள வீட்டுக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தினர். ட்விஷாவின் மரணத்​தில் கடைசி நிமிடங்​களில் என்ன நடந்​தது என்​பது மீண்​டும் தத்​ரூப​மாக உரு​வாக்​கப்​பட்​டது. ட்விஷாவை போன்று 80 கிலோ எடை கொண்ட உருவ பொம்மை கொண்டுவரப்​பட்​டது. அது தூக்​கில் தொங்க விடப்​பட்​டது. அப்​போது கணவர் சமர்த் சிங்​கும், மாமி​யார் கிரி​பால் சிங்​கிடம் சிபிஐ அதி​காரி​கள் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர்.

போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​காமல் ட்விஷா​வின் உடலை கீழே இறக்​கியது ஏன்? சிசிடிவி கேமரா பதிவு​களை முழு​மை​யாக அழித்​தது ஏன்? ட்விஷா தூக்​கில் தொங்க பயன்​படுத்​திய கயிறை மறைத்​தது ஏன்? தவறு செய்​ய​வில்லை என்​றால் கணவர் சமர்த் சிங் தலைமறை​வானது ஏன் என பல்​வேறு கேள்வி​கள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர்​கள் அளித்த பதில்​கள் வீடியோ​வில் பதிவு செய்​யப்​பட்​டன.

இதுகுறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறும்போது, ‘‘மாமி​யார் கிரி​பாலா சிங் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். கணவர் சமர்த் சிங் கிரிமினல் வழக்​கறிஞ​ராக பணி​யாற்றி வரு​கிறார். கிரி​பாலா சிங் தனது செல்​வாக்கை பயன்​படுத்தி பல்​வேறு முக்​கிய தடயங்​களை அழித்​துள்​ளார்’’ என்று​ தெரி​வித்​துள்​ளன.

நடிகை ட்விஷா மரணத்தில் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? - கணவர், மாமியாரிடம் சிபிஐ விசாரணை
மம்தாவின் கூட்டத்தை புறக்கணித்த 60 திரிணமூல் எம்எல்ஏக்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in