Published : 09 Oct 2017 09:53 AM
Last Updated : 09 Oct 2017 09:53 AM

குறுகிய கால அவகாசத்தில் போரிட விமானப் படை தயார்: விமானப் படை தளபதி தகவல்

குறுகிய கால அவகாசத்தில் போரிட இந்திய விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப் படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.

விமானப்படை தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் பி.எஸ்.தனோவா பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்புக்கு எத்தகைய சவால் வந்தாலும் அதை சமாளிக்க விமானப்படை முழு திறனோடு உள்ளது. பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, விமானப்படை தளங்களில் எந்த விதமான அச்சுறுத்தலையும் எதிர்த்து தாக்குதல் நடத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அவகாசத்தில் போரிடக் கூடிய அளவுக்கு விமானப்படை தயாராக உள்ளது.

அவானி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய 3 பெண் விமானிகள் கடந்த ஆண்டு ஜூலையில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 வார தீவிர பயிற்சியில் தங்கள் திறமையை நிரூபித்த பின் போர் ஜெட் விமானங்களை அவர்கள் இயக்குவார்கள்.

இவ்வாறு தனோவா பேசினார். இந்த 3 பெண் விமானிகளும் அடுத்த மாதம் போர் ஜெட் விமானங்களை இயக்குவார்கள். போர் விமானங்களை இயக்கும் முதல் 3 பெண் விமானிகள் என்ற பெருமை இவர்களுக்கு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x