ராகுல் பாஸ்போர்ட் பெற நீதிமன்றம் அனுமதி

ராகுல் பாஸ்போர்ட் பெற நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற ராகுல் எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார். இந்நிலையில் தனது பாஸ்போர்ட்டை(டிப்ளமாட்டிக் பாஸ்போர்ட்) ஒப்படைத்த ராகுல், சாதாரண பாஸ்போர்ட் கேட்டு, டெல்லியில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி வைபவ் மேத்தா, ராகுலுக்கு 3 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்க நேற்று அனுமதி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in