Last Updated : 09 Oct, 2017 06:11 PM

 

Published : 09 Oct 2017 06:11 PM
Last Updated : 09 Oct 2017 06:11 PM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேச விரோத சிந்தனைகளை வளர்க்கிறது: கிரண் ரிஜிஜு தாக்கு

‘ஜன் ரக்‌ஷா யாத்ரா’வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஈடுபடும் வன்முறைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் சிபிஎம் கட்சி தேச விரோத சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறது என்றும் சாடினார்.

இதில் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் கலந்து கொண்டு தெரிவித்த போது, “கேரளாவில் இடதுசாரிகள் ஈடுபடும் அரசியல் கொலைகளுக்கான பதில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவே இருக்க வேண்டும். மக்களை அச்சுறுத்துவதற்காக இடதுசாரிகள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர், இந்த உத்திகளுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்றார்.

கிரண் ரிஜிஜு மேலும் கூறும்போது, காங்கிரஸ் மத்தியில் இருந்தால் கேரளாவில் இந்நேரம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும், ஆனால் பாஜக இடதுசாரிகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுகிறது, என்றார்.

“இதுவே செயல்படுவதற்கான நேரம், நாட்டுக்கு எதிரான சக்திகள் நீண்ட காலம் இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், சிபிஎம் கட்சிக்கு தேச விரோத சிந்தனைகள் உள்ளன. நாங்கள் பாஜக தொண்டர்கள், கடுமையான சூழ்நிலைகளில் வாழ்கிறோம்.

ஜன் ரக்‌ஷா யாத்ரா அக்டோபர் 17-ம் தேதி திருவனந்தபுரத்தில் முடிவடைகிறது. இதில் மூத்த பாஜக தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x