Published : 26 May 2023 05:37 AM
Last Updated : 26 May 2023 05:37 AM

மகாராஷ்டிரா | விபத்தில் 150 ஆடுகள், 4 பேர் உயிரிழப்பு

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் டைல்ஸ் ஏற்றிவந்த லாரியின் பின்னால் ஆடுகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 ஆடுகள் இறந்தன.

நான்டெட் - கலம்னுரி சாலையில் உள்ள மாலேகான் பாட்டா என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு உள்ளூர் மக்கள் உதவியுடன் லாரிகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரடைந்தது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x