Published : 25 Oct 2017 10:42 AM
Last Updated : 25 Oct 2017 10:42 AM

பாஜக அல்லாத முதல்வர்களுக்கு சீதாராம் யெச்சூரி அழைப்பு

 

‘‘பாஜக அல்லாத முதல்வர்கள் அனைவரும் கூட்டாட்சியைப் பாதுகாக்க ஒன்றுசேர வேண்டும்’’ என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நேற்று யெச்சூரி கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, எதேச்சதிகார ஆட்சி நடத்த முயற்சி செய்கிறார். எனவே, அரசியலைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் ஒன்று சேர வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் மாநில உரிமையில் ஏஜென்சிகள் மூலம் மத்திய அரசு தலையிடுகிறது.

கேரளாவில் நடந்த கொலைகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் வழக்கு தொடுத்துள்ளது. யார் வேண்டுமானாலும் விசாரணை நடத்தட்டும். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது. அதுதான் கூட்டாட்சி தத்துவம். ஆனால், மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுகிறது.தற்போதுள்ள நாடாளுமன்ற முறையை மாற்றி, அதிபர் ஆட்சி முறையை மோடி விரும்புகிறார் என்பது இதுபோன்ற நடவடிக்கைகளால் தெரிகிறது.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x