பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - பாட்னா நீதிமன்ற தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - பாட்னா நீதிமன்ற தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பிஹார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதனிடையே இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து பிஹார் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா மற்றும் ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் விதித்த தடையை உடனடியாக நீக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதே நேரம் இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in