Published : 23 Oct 2017 10:37 AM
Last Updated : 23 Oct 2017 10:37 AM

சுற்றுலா பயணிகள் தங்க விரைவில் தேசிய கொள்கை

சுற்றுலா பயணிகளுக்கான வாடகை வீடு திட்டம் தொடர்பாக விரைவில் தேசிய கொள்கை வெளியிடப்படும் என்று துறை செயலாளர் ரேஷ்மி வர்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

சுற்றுலா தலங்களில் ஓட்டல் அறைகளுக்கு மாற்றாக ‘ஹோம் ஸ்டே’ எனப்படும் வாடகை வீடு பிரபலமாகி வருகிறது. இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் வருவாயும் கிடைக்கிறது. இதனை ஊக்கப் படுத்தவும் வரன்முறைப்படுத்தவும் விரைவில் தேசிய கொள்கை வெளியிடப்படும். இதுதொடர்பாக பல்வேறு சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அக்டோபர் இறுதிக்குள் தேசிய கொள்கையை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

தற்போது மத்திய, மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு ‘ஹோம் ஸ்டே’ வாடகை வீடுகளுக்கு உரிமம் வழங்குகிறது. புதிய தேசிய கொள்கை வெளியாகும்போது வாடகை வீடு திட்ட நடை முறைகள் மேலும் எளிமைப் படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x