Published : 20 Sep 2017 10:35 AM
Last Updated : 20 Sep 2017 10:35 AM

‘தாய்மொழியில் பேச வேண்டும்’

கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தங்கள் தாய்மொழியை மறக்கக் கூடாது. தாயை ‘மம்மி’ என்றும் தந்தையை ‘டாடி’ என்றும் இப் போது அழைக்கிறோம். தாயை தமிழில் ‘அம்மா’ என்றும் உருது மொழியில் ‘அம்மி’ என்றும் அழைக்கும்போது அந்த வார்த்தை இதயத்தில் இருந்து வருகிறது. ‘மம்மி’ என்று அழைக்கும்போது அது உதட்டிலிருந்து வருகிறது. எனவே அனைவரும் தாய் மொழியிலேயே பேச வேண்டும். வெளிநாட்டினரிடம் ஆங்கிலத்தில் பேசலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x