Published : 12 Jul 2014 02:16 PM
Last Updated : 12 Jul 2014 02:16 PM
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று காலை தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 6 வயது சிறுவன் ஒருவன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
இம்பாலில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள லங்தன்பால் என்ற இடத்தில் இன்று காலை 9.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவ்வழியாக செல்லவிருந்த பாதுகாப்புப் படையினரை குறிவைத்தே குண்டு வெடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தவுடன் அப்பகுதி பாதுகாப்புப் படையினர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அங்கு வெடித்தது குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு என நிபுணர்கள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT