Published : 23 Sep 2017 04:31 PM
Last Updated : 23 Sep 2017 04:31 PM
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் மூத்த பத்திரிகையாளர் ஒருவரும் அவரது தாயாரும் மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மொஹாலி துணை கண்காணிப்பாளர் ஆலம் விஜய் சிங், "மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் (60), அவரது தாயார் குருசரண் கவுர்(92) ஆகிய இருவரும் அவர்களது வீட்டில் சடலமாக கிடந்தனர். அவர்களது கழுத்தில் காயம் இருந்தது. பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளோம். இருவரும் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்" என்றார்.
மறைந்த கே.ஜே.சிங், தி ட்ரிபியூன் உட்பட பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு உத்தரவு:
இதற்கிடையில், கே.ஜே.சிங் மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்குமாறு அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT