Published : 07 Jul 2014 12:19 PM
Last Updated : 07 Jul 2014 12:19 PM

6 நாடுகளுக்கு அமலாக்கப் பிரிவு கடிதம்: ஹெலிகாப்டர் பேர ஊழல் விவரம் கேட்கிறது

கடந்த ஆட்சியில் நடந்த ஹெலி காப்டர் பேர ஊழல் குறித்த விவரங் களைக் கேட்டு, இத்தாலி, மொரீஷியஸ் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு கடிதம் அனுப்ப அமலாக்கப் பிரிவு திட்டமிட் டுள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மிக முக்கிய நபர்கள் (விவிஐபி-க்கள்) பயணம் செய்ய பயன்படுத்தப்படும் ஹெலி காப்டர்களை ரூ.3,600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப் பட்டது.

இதில், இத்தாலி நிறுவனமான பின்மெக்கானிக்கா மற்றும் இந்திய விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகி, அவரது குடும்பத்தி னர் மீது சிபிஐ கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கு பதிவு செய்தது.

இதில், பெருமளவில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந் துள்ளதாக வெளியான தகவலை யடுத்து, சில தினங்களுக்கு முன்பு சட்டவிரோத பணப் புழக்க தடைச் சட்டம் (பிஎம்எல்ஏ)-ன் கீழ் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர்கள், ஐரோப் பிய கூட்டமைப்பைச் சேர்ந்த கார்லோ ஜெரோசா, கிறிஸ்டியன் மைக்கேல், கெய்டோ ஹஸ்க், நான்கு நிறுவனங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன. மேலும், இத்தாலி யைச் சேர்ந்த பின்மெக்கானிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லாண்டு, மொரீஷியஸ் மற்றும் டுனீஷியாவில் கிளை களை வைத்து அங்கிருந்து பல் வேறு நாடுகளுக்கு பணப்பரி மாற்றம் செய்த பஞ்சாப் மாநிலம் சண்டீகரைச் சேர்ந்த ஐஓஎஸ் இன்போடெக் மற்றும் ஏரோ மேட்ரிக்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்கள் மீதும் அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.

இவை உள்ளிட்ட 170 போலி நிறுவனங்கள் வழியாக சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந் துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பண மாற்றங்களின் விவரங் களைக் கண்டறிய இத்தாலி, மொரீஷியஸ், துபாய் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு முறைப்படி கடிதம் அனுப்ப அமலாக்கப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

நீதிமன்றம் மூலம் முறைப்படி, ‘தகவல் கோரும் ஆணை’ பெற்று இந்த கடிதம் அனுப்பப்பட உள்ளது. வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வெளி யுறவு ஒப்பந்தங்கள் மற்றும் தற் போது நாடுகளிடையே கடைப் பிடிக்கப்படும் சட்டப்பூர்வ நடை முறைகளின் கீழ் இந்த கடிதம் அனுப்பப்பட உள்ளது.

ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பாக நடந்த பணப் பரி வர்த்தனைகள், அதற்கு பயன் படுத்தப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள், கணக்கு வைத்துள்ள நிறுவனங்களின் பெயர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்க அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முந்தைய பாஜக ஆட்சிக்கும் பங்கா சி.பி.ஐ. விசாரணை?

ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக, மேற்குவங்கம் மற்றும் கோவா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர்கள் எம்.கே. நாராயணன், பிவி வான்சூ ஆகியோரிடம் சிபிஐ கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது.

முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கடந்த 2003-ம் ஆண்டு விஐபிகளுக்கான ஹெலிகாப்டர் பறக்கும் திறனை (உயரம்) குறைக்க முடிவு செய்தது. இதன் அடிப்படையிலேயே, கடந்த 2005-ம் ஆண்டு ஹெலிகாப்டர் பறக்கும் திறனைக் குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது என அப்போது சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) தலைவராக இருந்த வான்சூ தெரிவித்தார். எம்.கே. நாராயணனும் இதுபோன்ற கருத்தையே தெரிவித்தார். எனவே, முந்தைய பாஜக கூட்டணி ஆட்சிக்கும் பங்கு உள்ளதா என சிபிஐ விசாரிக்கும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x