Published : 19 Sep 2017 06:43 PM
Last Updated : 19 Sep 2017 06:43 PM
காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தானிலிருந்து நிதி வருவதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் இருவர் கொடுத்த வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளதாக காஷ்மீர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதித்துறை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அளிக்கப்பட்ட இந்த வாக்குமூலத்தினால் பிரிவினைவாதிகள் மீதான பிடி இறுகுகிறது. பிரிவினைவாதிகள் கல்லெறி சம்பவத்துக்கு நிதியுதவி அளிப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (பெயர் கூற விரும்பாத) தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட மற்றொருவர் அப்ரூவராக மாறுகிறேன் என்று கூறியதையடுத்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் வாக்குமூலம் அளித்த இருவரின் பெயர்களை வெளியிட மறுத்தனர்.
ஆகஸ்ட் 24-ம் தேதி கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் என்ஐஏ விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
அதாவது பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவை பிரிவினைவாதிகளுக்கு எப்படி பணம் அனுப்புகிறது என்ற விவரங்களை அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குமூலம் அளித்தாகக் கூறப்படும் இன்னொரு நபர் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு நெருங்கியவர் என்று கூறப்படுகிறது.
விசாரணை முகமை எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை, தாங்களாகவே மனமுவந்துதான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவாக்கப்பட்டுள்ளது, கோர்ட் வளாகத்தில் விசாரணை அதிகாரி ஒருவர் கூட இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT