Published : 30 Sep 2017 11:45 AM
Last Updated : 30 Sep 2017 11:45 AM
மூத்த நாடக நடிகரும், திரைப்பட நடிகருமான டாம் ஆல்டரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வம்சாவளியைச் சேர்ந்த டாம் ஆல்டர் இந்தியாவின் பல்வேறு நாடகங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். டாம் ஆல்டர்க்கு இந்திய அரசு 2008-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த டாம் ஆல்டர் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை டாம் ஆல்டர் அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67.
டாம் ஆல்டரின் மரணம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், டாம் ஆல்டர் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி நினைவு கூர்ந்தார். மறைந்த டாம் ஆல்டரின் குடும்பத்துக்கு தனது வருத்தத்தையும் தெரிவிப்பதாக பதிவு செய்துள்ளார்.
டாம் ஆல்டர் காந்தி திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஆஷிகி, பரிந்தா, கிராந்தி போன்ற பிரபலமான படங்களில் அவர் நடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT