Published : 11 Sep 2017 10:10 AM
Last Updated : 11 Sep 2017 10:10 AM

ராம்ஜெத்மலானி வழக்கறிஞர் தொழிலில் ஓய்வு

வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி (94) அறிவித்துள் ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை வரவேற்று நடந்த பார் கவுன்சில் கூட்டத்தில் ராம்ஜெத்மலானி கலந்து கொண்டார். அவர் பேசும்போது, செப்டம்பர் 14-ம் தேதி முதல் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அன்றுதான் ராம்ஜெத்மலானிக்கு 95-வது பிறந்தநாள்.

கடந்த 76 ஆண்டுகளாக வழக்கறிஞர் தொழிலில் ராம் ஜெத்மலானி ஈடுபட்டிருந்தார். பரபரப்பை ஏற்படுத்திய பல வழக்குகளில் அவர் ஆஜராகியுள்ளார். வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றாலும் புதிய பங்களிப்பில் ஈடுபடுவேன் என்றும் வாழ்நாள் வரை எனது பணி இருக்கும் என்றும் ஜெத்மலானி தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x