நாட்டில் 163 நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 4,435 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

நாட்டில் 163 நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 4,435 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 163 நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 4,435 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 4,435 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 163 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட அதிகபட்ச தொற்றாகும்.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4,777 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23,091 ஆக உயர்ந்துள்ளது.

இது மொத்த பாதிப்பில் 0.05 சதவீதமாகும். மேலும், இதுவரை 4.47 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 79,712 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 15 பேர்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 5 லட்சத்து 30,916 பேர் இறந்துள்ளனர். நாடுமுழுவதும் குணமடைவோர் எண்ணிக்கை 98.76 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு 3.38 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 2.79 சதவீதமாகவும் உள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை நாடு முழுவதும் 220.66 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in