Published : 10 Sep 2017 01:39 PM
Last Updated : 10 Sep 2017 01:39 PM
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் அவசியம். அதன்படி ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன்மூலம் தேர்தல் செலவுகளைக் குறைக்க முடியும். சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக மத்திய அரசின் முக்கிய திட்டங்களை குறிப்பிட்ட மாநிலங்களில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை எழுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT