Published : 27 Mar 2023 11:27 AM
Last Updated : 27 Mar 2023 11:27 AM

இந்தியாவில் 10,000-ஐ கடந்த அன்றாட கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,805 பேருக்கு தொற்று

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 134 நாட்களுக்குப் பின்னர் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,000- ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழை) ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 10,300 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 64 ஆயிரத்து 815 ஆக உள்ளது. கரோனா தொற்றால் சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் தலா ஒருவர், கேரளா மாநலத்தில் இருவர் என மொத்தம் 6 பேர் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 837 ஆக உள்ளது.

இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x