ராகுலுக்கு தண்டனை அதிகமானது: பிரசாந்த் கிஷோர் கருத்து

ராகுலுக்கு தண்டனை அதிகமானது: பிரசாந்த் கிஷோர் கருத்து
Updated on
1 min read

பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராகுல் காந்தி விஷயத்தில் நான் கருத்து சொல்வதற்கு சட்ட நிபுணர் கிடையாது. ஆனால் சட்டத்தின் செயல்பாட்டுக்கு உரிய மரியாதையுடன் கூற வேண்டும் என்றால், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகையானது என்று தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு பெரிய மனது காட்டியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கட்சியினர் மேல் முறையீடு செல்லும் வரைக்கும் சில நாட்கள் பொறுத்திருந்து தகுதி இழப்பு முடிவை அமல்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in