லட்சத் தீவு எம்.பி. முகமது பைசல் போன்று மீண்டு வருவாரா ராகுல்?

லட்சத் தீவு எம்.பி. முகமது பைசல் போன்று மீண்டு வருவாரா ராகுல்?
Updated on
1 min read

புதுடெல்லி: லட்சத் தீவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முகமது பைசல். கடந்த 2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர் சையதுவின் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் முகமது பைசலுக்கு 10 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

ஆனால், முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், எம்பி பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று உத்தரவிட்டது. தற்போது எம்பி பதவியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முகமது பைசல் பங்கேற்று வருகிறார்.

இதேபோல் ராகுல் காந்தியும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in