மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவென்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அதிகாரபூர்வமாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 1ம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அகவிலைப்படி உயர்வால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

சிலிண்டர் மானியம் அதிகரிப்பு: பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in