Published : 07 Sep 2017 10:15 AM
Last Updated : 07 Sep 2017 10:15 AM
வாட்ஸ்அப் சமூக வலைதளம் தனது வாடிக்கையாளர்கள் அளிக்கும் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் மற்றும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும் அதை ஆட்சேபித்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, தகவல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அரசுக்கு தக்க பரிந்துரைகளை வழங்கும்’’ என்று கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT