Published : 19 Mar 2023 05:35 AM
Last Updated : 19 Mar 2023 05:35 AM

காசி கோயிலுக்கு 100 முறை சென்ற உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்

வாரணாசி: கடந்த 2017-ம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார். இந்நிலையில் யோகி ஆதித்ய நாத் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் வாரணாசி சென்றார். கடந்த 6 ஆண்டில் இது அவரது 113-வது பயணம் ஆகும்.

வாரணாசி சென்ற யோகி, நேற்று அங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டார். கடந்த 6 ஆண்டில் அவர் விஸ்வநாதரை வழிபட்டது 100-வது முறை ஆகும். இதன்மூலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 100 முறை சென்ற முதல் உ.பி. முதல்வர் என்ற பெருமை யோகி ஆதித்யநாத்துக்கு கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x