Published : 18 Mar 2023 05:09 AM
Last Updated : 18 Mar 2023 05:09 AM

அதிக ஓய்வூதியம் பெற 1.2 லட்சம் பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: பணியாளர் ஓய்வூதிய திட்டம் 1995 (இபிஎஸ்-95) திட்டத்தின் கீழ் அதிகபட்ச ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் 1.20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி மாநிலங்களவையில் அளித்த பதிலில், ‘‘அதிகபட்ச ஓய்வூதியத்தைப் பெற இபிஎஃப்ஓ-வின் ஒருங்கிணைந்த ஆன்லைன் தளத்தின் மூலம் கடந்த 9-ம் தேதி வரை 1,20,279 விண்ணப்பங்கள் சந்தாதாரர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.மே 3-ம் தேதியுடன் இந்த அவகாசம் முடிவடைகிறது. மார்ச் 13, 2023 நிலவரப்படி, 2.79 கோடி பேர் வீட்டுப் பணியாளர்களாக ஈஷ்ராம் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர்’’ என்று தெரிவித் துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x