Published : 24 Sep 2017 07:38 AM
Last Updated : 24 Sep 2017 07:38 AM
ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ரயான் சர்வதேசப் பள்ளியில் 7 வயது மாணவன் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை சிபிஐ நேற்று தனது காவலில் எடுத்தது.
இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சிபிஐ நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் ரயான் பள்ளியின் பேருந்து நடத்துநர் அசோக்குமார், பள்ளிக் குழுமத்தின் பிராந்திய தலைவர் பிரான்சிஸ் தாமஸ், மனிதவள அதிகாரி ஜேயுஸ் தாமஸ் ஆகிய மூவரை சிபிஐ தங்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு இவர்களை 1 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
ரயான் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியூமன் என்ற மாணவன், அப்பள்ளி கழிப்பறையில் கடந்த 8-ம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT