Last Updated : 03 Sep, 2017 04:01 PM

 

Published : 03 Sep 2017 04:01 PM
Last Updated : 03 Sep 2017 04:01 PM

நிர்மலா சீதாராமன் திறமையானவர்: அருண் ஜேட்லி புகழாரம்

இணை அமைச்சராக இருந்து கேபினட் அமைச்சராக உயர்ந்துள்ள நிர்மலா சீதாரானுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் திறமைசாலி என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2014ல் பொறுப்பேற்றத்திலிருந்து இணை அமைச்சராக பணியாற்றி வந்தவர் நிர்மலா சீதாராமன்.

அவருக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டு பாதுகாப்புத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் அமைச்சர் என்ற அந்தஸ்தையும் இதன்மூலம் பெற்றுள்ளார்.

இதைக் குறிப்பிட்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, "நிர்மலா சீதாராமன் திறமையானவர். அவர் திறமையான வெற்றியாளராகத் திகழ்வார். திறமையாகச் செயல்படும்அமைச்சர்களுக்கு பொறுப்புகளும் அதிகமாகும்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x