Published : 12 Mar 2023 05:15 AM
Last Updated : 12 Mar 2023 05:15 AM

விலை அதிகரிக்காமல் 150 நாடுகளுக்கு மருந்து விநியோகம்

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக அளவில் கரோனா பரவல் தீவிரமடைந்தது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்தது.

இந்த சமயத்தில் இந்தியா வெளிநாடுகளுக்கு மருந்துப் பொருட்களை விலைஅதிகரிக்காமல் அனுப்பியது.

கரோனா கால கட்டத்தில் உலகளவில் கடும் நெருக்கடி பல்வேறு சவால்கள் ஏற்பட்டன. எனினும், லாப நோக்கு இல்லாமல், மனிதாபிமான முறையில் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளது. மருந்துப் பொருட்களின் விலையை ஏற்றவும் இல்லை. அதன் தரத்திலும் சமரசம் செய்யவில்லை.

இவ்வாறு அமைச்சர் மாண்டவியா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x