Published : 15 Sep 2017 08:50 AM
Last Updated : 15 Sep 2017 08:50 AM
அமர்நாத் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே அரிபாக் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு நேற்று காலை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையிருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் -இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அபு இஸ்மாயில் என்ற தீவிரவாதி உட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் டிஜிபி எஸ்.பி.வெயித் தெரிவித்தார். மற்றொரு தீவிரவாதியை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதி அபு இஸ்மாயில், அமர்நாத் பக்தர்கள் மீது நடந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் என்று போலீஸார் தெரிவித்தனர். தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த ஜூலை 10-ம் தேதியன்று அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT