Published : 10 Mar 2023 05:24 AM
Last Updated : 10 Mar 2023 05:24 AM

உ.பி.யில் லாரியில் பசுக்கள் ஏற்றிவந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் லாரியில் பசுக்கள் ஏற்றி வந்தவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் அவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து லக்னோ நகரின் பாரா காவல் நிலைய அதிகாரி டி.பி.சிங் நேற்று கூறியதாவது: பிரேம் சிங் (50) என்பவர் புதன்கிழமை தனது லாரியில் 13 பசுக்களுடன் மெயின்புரி நோக்கிசென்றார். லக்னோ அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுடப்பட்டார். இதையடுத்து பிரேம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் 307-வது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளோம். பிரேம் சிங் சுடப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x