Published : 08 Sep 2017 08:44 AM
Last Updated : 08 Sep 2017 08:44 AM
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வந்த போது, அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங், பிஹார் மாநிலம் நவாடா தொகுதியில் இருந்து பாஜக சார்பில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். டெல்லியில் இருந்து நேற்று அவர் பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னா வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராளமான ஆதரவாளர்கள் காத்திருந்தனர்.
அமைச்சர் கிரிராஜ் சிங் வந்ததும் அவரை வரவேற்கும் விதமாக கோஷமிட்டபடி பலர் விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் (சிஐஎஸ்எப்) தடுத்து நிறுத்தினர். இதனால் கோபம் அடைந்த ஆதரவாளர்கள் வீரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT