Published : 09 Sep 2017 09:34 AM
Last Updated : 09 Sep 2017 09:34 AM

மிலிட்டரி போலீஸில் பெண்கள்

மிலிட்டரி போலீஸில் பெண்களை சேர்க்கும் திட்டத்தை ராணுவம் இறுதி செய்துள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து லெப்டினன்ட் ஜெனரல் அஷ்வனி குமார் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆண்டுக்கு 52 பெண்கள் வீதம் சுமார் 800 பெண்கள் மிலிட்டரி போலீஸில் சேர்க்கப்படுவார்கள்” என்றார்.

ராணுவத் தளபதி பிபின் ராவத் கடந்த ஜூன் மாதம் கூறும்போது, “பெண் ஜவான்கள் சேர்க்கப்படுவதை ராணுவம் எதிர்நோக்கியுள்ளது. மிலிட்டரி போலீஸில் பெண்கள் சேர்க்கப்படுவதில் இருந்து இதற்கான நடைமுறைகள் தொடங்கும்” என்றார்.

ராணுவ அதிகாரி அஷ்வனி குமார் மேலும் கூறும்போது, “பெண்கள் தொடர்பான குற்றப் புலனாய்வுக்கு, பெண் போலீஸார் உதவியாக இருப்பார்கள்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x