Published : 16 Sep 2017 09:41 AM
Last Updated : 16 Sep 2017 09:41 AM

குருகிராம் பள்ளி சிறுவன் கொலை: சிபிஐ விசாரணை

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ரயான் சர்வதேசப் பள்ளியில் கடந்த 8-ம் தேதி 7 வயது மாணவர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று மாணவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மேலும் பள்ளி நிர்வாகத்தை 3 மாதங்களுக்கு அரசு ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்தார். இந்த வழக்கில் பள்ளி பேருந்து ஓட்டுநர் அசோக்குமார் (42) கைது செய்யப்பட்டுள்ளார். அசோக்குமாரை கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ள செய்ததாக அவரது மனைவி போலீஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x