Published : 10 Jul 2014 01:35 PM
Last Updated : 10 Jul 2014 01:35 PM

மத்திய பட்ஜெட் 2014: 9 நகரங்களில் இ-விசா சேவை

சுற்றுலாத் துறையை மேம்படுத்தவதற்காக 9 நகரங்களில் இ- விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

2014 - 15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, " சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவில் உள்ள 9 நகரங்களின் முக்கிய விமான நிலையங்களில் இ-விசா சேவை அறிமுகம் செய்யப்படும்.

இந்த இ-விசா சேவை இன்னும் 6 மாதங்களில் ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x